Monday 19 February 2018

இனி வச்சு செய்வோம் 4



வாசக நண்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கம். "என்ன சார், நீண்ட
நாட்களாக இந்த பக்கம் வரவே இல்லையே... மாதம் ஒரு பதிவாவது எழுதலாமே ?" என்று ஏராளமான நண்பர்கள் அக்கறையுடன் விசாரித்து மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டு இருக்கின்றனர்.
ஒரு சிலையை வடிக்கும் சிற்பி எவ்வளவு கவனத்துடன் செயல்படுவாரோ, அதைவிட ஆயிரம் மடங்கு கவனத்தோடு நம் வாழ்க்கையை அணுக வேண்டி இருக்கிறது.... தெளிவான சிந்தனை, சீரிய முயற்சி,  இறை அருள் இந்த மூன்றும் முக்கியம். இதில் ஒன்று இல்லாவிட்டாலும் விழலுக்கு இறைத்த நீர் கதை தான்.......
ஏனோ தானோவென்று  எழுதவும் முடியாது. அதே நேரம், என்னை பொறுத்த வரை - கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மீண்டும் கிடைக்காத அளவுக்கு விலை மதிப்பில்லாதது.
என்னால் தொடர்ந்து எழுத முடியும் என்று பொய்யான நம்பிக்கை கொடுக்க விரும்பவில்லை. (நிஜமாகவே பெரிய ஆள் ஆகிக் கொண்டு இருக்கிறேன் பாஸ்..... வாழ்த்தும் அன்பு உள்ளங்கள் அனைத்துக்கும் நன்றி ...!)   ஆனால் அதி முக்கியம் என்று என் மனதுக்குப் படும் விஷயங்களை - நான் நிச்சயம் உங்களுக்கு தெரியப் படுத்துவேன்... அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்....
என்னுடைய ஒவ்வொரு சின்ன சின்ன செய்கையும், வரவிருக்கும் சந்ததிக்கு தெளிவான பாதை அமைத்து கொடுப்பதில் தான் இருக்கிறது என்று தீர்க்கமாக நம்புபவன். "மேரா பப்பாக்கா நாம் பம்பானி ஹை , அம்பானி நஹி ஹை ......ன்னு" குடும்பத்துலே உள்ள யாரையும் புலம்ப விட்டுடக் கூடாது....
அப்படி இருக்கையில் ஒரு பரம்பரையை முன்னுக்கு வழி நடத்தி செல்லும் மாபெரும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. என்னால் முடியும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது..... அதில் தொடர்ந்து கவனத்துடன் , சீராக சென்று கொண்டு இருக்கிறேன்...
வாழ்க்கையின் வேறொரு முக்கியமான செயலில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டிய காரணத்தால் , அடிக்கடி கட்டுரைகள் எழுத முடியாமல் இருந்தது......  கடந்த இரண்டு வருடங்களாக கிட்டத்தட்ட தவம் போன்ற மாபெரும் முயற்சி, அவனது அருளால் வெற்றிகரமாக தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது...!
இங்கு தளத்தில் எழுத வில்லையே ஒழிய - மின்னஞ்சல் மூலம் ஒரு குரூப்பாக தகவல்கள் பரிமாற்றம் நடந்து கொண்டுதான் இருந்தது. ஷேர் மார்க்கெட் சம்பந்தமாக டிப்ஸ் - வாரத்தில் ஒருமுறையாவது - முக்கிய நிகழ்வுகளின் போது - அனுப்பிக்கொண்டு இருக்கிறேன். ஒரு ஐநூறு பேருக்குமேல் அதை பின்பற்றி வருகின்றனர். அதில், சில பல காரணங்களால் தானாகவே ட்ரேடிங் செய்ய முடியாமல் இருக்கின்ற  - முழுக்க முழுக்க லிவிங் எக்ஸ்ட்ரா வாசகர்கள், அவர்களுக்கு தெரிந்த நட்பு வட்டம் மட்டுமே இணைந்து - ஒரு குரூப் ட்ரேடிங் செய்து கொண்டு இருக்கிறோம்..... அதனால் ஒரு சிறு கவனப் பிசகும் நடக்க விடமுடியாத நிலை. என்னுடைய பணம் மட்டும் இருந்தாலே நூறு சதவீத கவனத்துடன் இருப்பவன், இப்போது இன்னும் சில குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் என்னாலான சிறு பங்களிப்பை செய்து கொண்டு இருக்கிறேன் எனும்போது பொறுப்பு பல மடங்குஅதிகமாகி இருக்கிறது ....!
"சரி, அது தான் தெரியுமே....., இப்போ அதுக்கு என்ன ? "ன்னு கேட்குறீங்களா ..? சமீபத்தில் என் batch trading ங்கில் சேர்ந்து இருந்த ஒரு நண்பரின் திடீர் மரணம் , அவரது குடும்பத்தை நிலைகுலைய செய்து விட்ட நிலையில் - அவரது இந்த இன்வெஸ்ட்மென்ட் ஒரு மிகப்பெரிய நிம்மதியை தந்து இருக்கிறது. உண்மையில் அவரது அறுபது வருட கால சேமிப்பை விட, இந்த ஒன்றரை வருட காலத்தில் அவரது இந்த முதலீடு மூலம் கிடைத்த வருமானம் அவர்கள் நினைத்து பார்க்காத ஒன்று. அந்த குடும்பம் அடைந்த நிம்மதியை வார்த்தைகளால் எழுத முடியாது.... ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பின் போது கிடைத்த, திக்கு முக்காட வைத்த சந்தோசம்.... 
அந்த நேரத்தில் எனக்கு தோன்றிய எண்ணம் - இப்படி வெளியே யாருக்கும் சொல்லாமல், குரூப் மெம்பர்ஸ் மட்டுமே செய்து கொண்டு இருக்கிறோமே. தளத்தின் வாசகர்கள் 90% பேர் இது பற்றி தெரியாமல் இருக்கின்றனரே... அவர்களுக்கும் தெரியப் படுத்தலாம். விருப்பம் இருப்பவர்கள் சேர்ந்து கொள்ளட்டும் என்று நினைத்து இங்கே எழுதுகிறேன்.... 2020 ஆம் ஆண்டின் கார்த்திகை தீபம் வரை இந்த குரூப் ட்ரேடிங் தொடர்ந்து நடக்கும்... பல விஷயங்களை இங்கே தெளிவு படுத்த முடியாத காரணத்தால் - மேலதிக விவரங்களுக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். குரூப்பில் இணைந்தது கொள்ள கடைசி தேதி - அக்டோபர் 7,2015 ( மெயில் ID : editor@livingextra .com). தகுதியானவர்களுக்கு இந்த மெயில் உரிய நேரத்தில் சென்று அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தாமதமாக வரும் கோரிக்கைகள் எந்த காரணம் கொண்டும் பரிசீலிக்கப் படாது, மன்னிக்கவும் ...... !
சிறப்பான முறையில் இயங்கி கொண்டு இருக்கும் குழுவில் இன்னும் உறுப்பினர்களை சேர்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை, யாரோ ஒரு தேவையான நண்பருக்கு, தக்க சமயத்தில் இந்த தகவல் உதவியாக இருக்குமோ என்று எண்ணி - தகவலை பார பட்சமின்றி சேர்த்து விட்டோம், சேர்ந்து கொள்ள வாய்ப்பு இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும், என்று என்னுடையை மன திருப்திக்காக மட்டுமே தெரியப் படுத்துகிறேன். Choice is yours ....! (நமது குரூப்பில் இப்போது இருப்பவர்கள், பயன் அடைந்து கொண்டு இருப்பவர்கள் நீங்கள் விருப்பினால் , உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடலாம்...!)
என்னையே எடுத்துக் கொண்டால் - இந்த மூன்று வருடங்களில் , அண்ணாமலையாரின் அருளால் பிரமிக்கத்  தக்க வளர்ச்சி....!  நிச்சயமாக இது என்னுடைய முயற்சி மட்டும் கிடையாது, இறை அருள் , உங்களை போன்ற நண்பர்களின் வேண்டுதல், ஆசி....! 
தொடர்ந்து நிலைத்து நிற்க பரம்பொருள் துணை புரியட்டும்.....! மாதம் ஒரு நாளில் கிரிவலம் செல்வதை என்னால் முடிந்தவரை தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்.....! நீங்களும் முடிந்தால் கடை பிடித்துப் பாருங்கள்...! கிடைக்கும் வைப்ரேஷன் உங்களை தொடர்ந்து வர வைக்கும்..... வாழ்த்துக்கள்....!  சமீபத்தில் நிகழ்ந்த சில தெய்வீகமான அனுபவங்களையும், நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள ஆவல். அடுத்த சில கட்டுரைகளில் அது சாத்தியம் என நம்புகிறேன்... விரைவில் சந்திக்கிறேன்......!
வாழ்க அறமுடன், வளர்க அருளுடன்....!
ரிஷி

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.